குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு,சென்னை
ராமனால் தான் இப்புனித தலம் உருவானது. அது பற்றிய புராண வரலாற்றைப் பார்க்கலாம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்ட பிறகு ராமன் அயோத்தி திரும்பி மகிழ்ச்சியுடன் ஆட்சி நடந்து வந்தார்.
திடீரென ஒருநாள் அவருக்கு மக்கள் தன்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் ஒற்றன் ஒருவனை அனுப்பி வைத்தார். அவன் திரும்பி வந்து, ``அரசே இரவில் பிரிந்திருந்த கணவன்-மனைவி இருவரும் சண்டை போடுவதை நான் பார்க்க நேர்ந்தது.
அந்த கணவன், நான் ஒன்றும் ராமன் அல்ல. அவன் வேண்டுமானால் பலநாள் பிரிந்திருந்த சீதையை சேர்த்துக் கொண்டிருக்கலாம். ஒருநாள் இரவு நீ என்னை பிரிந்ததால் உன்னை இனி நான் என் மனைவியாக சேர்க்க மாட்டேன் என்று கூறினான் என்றான். இதை கேட்ட ராமன், சீதைக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தார்.
அப்போது சீதை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். சீதையை அழைத்துச் சென்று காட்டுக்குள் விட்டு வருமாறு லட்சுமணருக்கு ராமர் உத்தரவிட்டார். அதை ஏற்று லட்சுமணர், சீதையை அழைத்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் இப்போதைய கோயம்பேடு தர்ப்பைப் புற்கள், மாமரங்கள், பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது.
கூவம் நதி புனித நதியாக ஓடிக் கொண்டிருந்தது. சீதையை அங்கு விட்டு, விட்டு லட்சுமணர் சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதை தன் நிலையை எண்ணி சத்தம் போட்டு கதறி அழுதார். திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த வால்மீகி முனிவர், தர்ப்பை சேகரிக்க வந்தார்.
சீதையின் அழுகுரல் கேட்டு சென்றவர், எல்லாவற்றையும் அறிந்தார். பிறகு சீதையை அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். சிறிது நாளில் சீதை லவன் எனும் மகனை பெற்றெடுத்தார். ஒருநாள் லவனை காணாததால் வால்மீகி முனிவர் தர்ப்பையை கிள்ளிப் போட்டு குசனை உருவாக்கினார்.
லவன், குசன் இருவரும் எல்லாவித பயிற்சிகளையும் கற்று சிறந்த வீரர்களாக தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க ராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார்.
ராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். அதனால் தான் இந்த இடம் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது.
(கோ- அரசன், அயம்- குதிரை, பேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்ததும் படை வீரர்களுடன் லட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டியடித்தனர். இதனால் வெகுண்டடெழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு வந்தார்.
அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர்.
அதற்கு வால்மீகி முனிவர், "சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்'' என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள் உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர்.
இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு "குசலவபுரீஸ்வரர்'' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது. இனி இந்த ஆலயத்தின் அமைப்பையும், இறை மூர்த்தங்களின் மகிமைகளையும் காணலாம்.
குறுங்காலீஸ்வரர் கோவில் 226 அடி நீளம், 137 அடி அகலம் கொண்டது. கோவில் இடது பக்கத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில் உள்ளது. சைவ-வைணவ ஒற்றமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இத்தலத்துக்குள் வால்மீகி முனிவர் தவக் கோலத்தில் உள்ளது போன்ற சிற்பம் உள்ளது.
அருகில் சீதை, லவன், குசன் உள்ளனர். குறுங்காலீஸ்வரர் கோவில் முன்பக்கத்தில் 16 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.30 - 6 மணி ராகு காலத்தில் இந்த சரபேசுவரருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
சமீப காலமாக இந்த பூஜையில் கலந்து கொண்டு சரபேசுவரரை வணங்குபவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டது. இத்தல சரபேசுவரரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கி வெற்றிகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த 16 கால் மண்டப தூண்களில் ராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
காசிக்கு இணையான தலம் :
இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இதை அறிந்து தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து குறுங்காலீஸ்வரரை வழிபட்டு பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் குறுங்காலீஸ்வரர் காசி இருக்கும் வட திசையை பார்த்தப்படி உள்ளார். அதனால் இத்தலம் காசிக்கு இணையான புனித தலமாக கருதப்படுகிறது.
ராமனால் தான் இப்புனித தலம் உருவானது. அது பற்றிய புராண வரலாற்றைப் பார்க்கலாம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்ட பிறகு ராமன் அயோத்தி திரும்பி மகிழ்ச்சியுடன் ஆட்சி நடந்து வந்தார்.
திடீரென ஒருநாள் அவருக்கு மக்கள் தன்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் ஒற்றன் ஒருவனை அனுப்பி வைத்தார். அவன் திரும்பி வந்து, ``அரசே இரவில் பிரிந்திருந்த கணவன்-மனைவி இருவரும் சண்டை போடுவதை நான் பார்க்க நேர்ந்தது.
அந்த கணவன், நான் ஒன்றும் ராமன் அல்ல. அவன் வேண்டுமானால் பலநாள் பிரிந்திருந்த சீதையை சேர்த்துக் கொண்டிருக்கலாம். ஒருநாள் இரவு நீ என்னை பிரிந்ததால் உன்னை இனி நான் என் மனைவியாக சேர்க்க மாட்டேன் என்று கூறினான் என்றான். இதை கேட்ட ராமன், சீதைக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தார்.
அப்போது சீதை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். சீதையை அழைத்துச் சென்று காட்டுக்குள் விட்டு வருமாறு லட்சுமணருக்கு ராமர் உத்தரவிட்டார். அதை ஏற்று லட்சுமணர், சீதையை அழைத்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் இப்போதைய கோயம்பேடு தர்ப்பைப் புற்கள், மாமரங்கள், பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது.
கூவம் நதி புனித நதியாக ஓடிக் கொண்டிருந்தது. சீதையை அங்கு விட்டு, விட்டு லட்சுமணர் சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதை தன் நிலையை எண்ணி சத்தம் போட்டு கதறி அழுதார். திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த வால்மீகி முனிவர், தர்ப்பை சேகரிக்க வந்தார்.
சீதையின் அழுகுரல் கேட்டு சென்றவர், எல்லாவற்றையும் அறிந்தார். பிறகு சீதையை அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். சிறிது நாளில் சீதை லவன் எனும் மகனை பெற்றெடுத்தார். ஒருநாள் லவனை காணாததால் வால்மீகி முனிவர் தர்ப்பையை கிள்ளிப் போட்டு குசனை உருவாக்கினார்.
லவன், குசன் இருவரும் எல்லாவித பயிற்சிகளையும் கற்று சிறந்த வீரர்களாக தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க ராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார்.
ராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். அதனால் தான் இந்த இடம் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது.
(கோ- அரசன், அயம்- குதிரை, பேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்ததும் படை வீரர்களுடன் லட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டியடித்தனர். இதனால் வெகுண்டடெழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு வந்தார்.
அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர்.
அதற்கு வால்மீகி முனிவர், "சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்'' என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள் உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர்.
இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு "குசலவபுரீஸ்வரர்'' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது. இனி இந்த ஆலயத்தின் அமைப்பையும், இறை மூர்த்தங்களின் மகிமைகளையும் காணலாம்.
குறுங்காலீஸ்வரர் கோவில் 226 அடி நீளம், 137 அடி அகலம் கொண்டது. கோவில் இடது பக்கத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில் உள்ளது. சைவ-வைணவ ஒற்றமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இத்தலத்துக்குள் வால்மீகி முனிவர் தவக் கோலத்தில் உள்ளது போன்ற சிற்பம் உள்ளது.
அருகில் சீதை, லவன், குசன் உள்ளனர். குறுங்காலீஸ்வரர் கோவில் முன்பக்கத்தில் 16 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.30 - 6 மணி ராகு காலத்தில் இந்த சரபேசுவரருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
சமீப காலமாக இந்த பூஜையில் கலந்து கொண்டு சரபேசுவரரை வணங்குபவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டது. இத்தல சரபேசுவரரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கி வெற்றிகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த 16 கால் மண்டப தூண்களில் ராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
நுழைவாயிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்பது போல உள்ளது. ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடங்களை காணலாம். அடுத்து 4 கால் மண்டபத்தில் நந்தி உள்ளார். ஒரு தடவை இவர் சித்தம் கலங்கி தவித்தார்.
அவருக்கு ஈசன் தெளிவை உண்டாக்கினார். இதனால் நந்தி, ஈசனுக்கு கட்டுப்பட்டவர் போல மூக்கணாங்கயிறுடன் காணப்படுகிறார். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் இந்த நந்தியிடம் இருந்து தான் பிரதோஷ நிகழ்வு தோன்றியதாக கருதப்படுகிறது.
இதனால் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு பிரதோஷம் பார்த்தால் ஆயிரம் பிரதோஷம் பார்த்ததற்கு சமமாகும். அதுபோல ஒரு சனி பிரதோஷத்தில் பங்கேற்றால், அது கோடி பிரதோஷத்தில் பங்கேற்று தரிசனம் செய்த பலனை தருமாம்.
குறுங்காலீஸ்வரர் தலத்தில் நந்தி பெருமானை வழிபட்டு கோடி பிரதோஷத்தில் பங்கேற்ற பலனை பெறத் தவறாதீர்கள். நந்தியை கடந்து சென்றால் 40 தூண்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபத்தை அடையலாம்.
இந்த மண்டப தூண்களில் ஏராளமான கண்கவர் சிற்பங்கள் இருப்பதை காணலாம். லவ, குச இருவரும் அஸ்வமேதயாக குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்துக் கொண்டிருக்கும் சிற்பம் கலை நயம் மிக்கது. இந்த மண்டபத்தின் நுழையும் பகுதியில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சன்னதியும், சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன.
அவர்களை தரிசித்து விட்டு ஈஸ்வரன் வீற்றிருக்கும் சன்னதிக்கு செல்லலாம். ஈஸ்வரன் சன்னதி இடது பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரும், வலது பக்கம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் சுமார் 4 அங்குல உயரமே கொண்ட லிங்க பாணத்தை கண் குளிர காண வேண்டும்.
லவனும், குசனும் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட இந்த லிங்கத்தை மனம் உருகி வழிபட்டால் எத்தகைய பித்ரு தோஷம் இருந்தாலும் விலகி விடும். இங்கு ஈசன் வடக்கு பார்த்து இருப்பதால் கருவறை கோஷ்டத்திலும் மாறுதலை பார்க்கலாம்.
விநாயகர், பிரம்மா, ஈஸ்வரனுக்கு பின்புறம் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை உள்ளனர். இந்த உள் பிரகாரத்தின் தொடக்கத்தில் நடராஜர், சூரியன், சந்திரன் உள்ளனர். கோமுக தீர்த்தம் விழும் இடத்துக்கு அருகில் சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது.
இவரைத் தொடர்ந்து விக்னேஸ்வரர், ஜுரகேசுவரர், அகஸ்தீசுவரர், கணேசமூர்த்தி, சாஸ்தா, கார்த்திகேயன், லிங்கம், திருமகள், சைவநால்வர், ஞானவாணி, நாகர்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். ஈஸ்வரனின் இந்த பிரகார வலம் முடிந்து அம்பாள் சன்னதிக்கு செல்லலாம்.
பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார். பக்தர்களின் துயர் தீர்க்க அம்பாள் புறப்படுவது போல அறம் வளர்த்த நாயகியின் தோற்றம் உள்ளது.
இவளை வழிபட திருமணம் கை கூடும். வியாதிகள் தீரும். மனக் குழப்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை. அம்மன் பிரகாரத்தை வலம் வந்து வழிபட்ட பிறகு அருகில் உள்ள நவக்கிரகங்களை வழிபடலாம். தாமரை பீடத்தில் நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் மனைவியுடன் சூரியன் உள்ளார்.
கீழே மற்ற கிரகங்கள் உள்ளன. வெளி சுற்றில் நந்தி சன்னதிக்கு வலது பக்கம் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளார். இவரை அருணகிரி நாதர் பாடியுள்ளார். இந்த சன்னதி அருகில் அண்ணாமலையார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
வெளி பிரகாரத்தை சுற்றி வந்தால் வில்வ விநாயகர், மடப்பள்ளி யாக சாலை, தலமரமான பலா ஆகியவற்றை காணலாம். லவன், குசன் இருவரும் உருவாக்கிய லவகுச தீர்த்தம் சிவால யத்துக்கும், பெருமாள் கோவிலுக்கும் பொதுவான தீர்த்தமாக உள்ளது.
கி.பி. 985 முதல் 1014 வரை ஆண்டு ஜெயம்கொண்ட சோழ மன்னர் இந்த கோவிலை பெரிய கற்கோவிலாக கட்டியதாக கூறப்படுகிறது. விஜய நகர மன்னர்களும் இங்கு திருப்பணி செய்துள்ளனர். இத்தலத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசிமகம், சிவராத்திரி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
ஈசன் இங்கு வடக்கு திசை பார்த்திருப்பதால் இத்தலம் மோட்சம் தரும் தலமாக கருதப்படுகிறது. இது தவிர சித்தர்கள், சப்தரிஷிகள், தேவர்கள், முனிவர்கள் இங்கு சூட்சம நிலையில் அருள் பாலிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தை வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்வது நல்லது. ஆலயத்தை 044-24796237 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அவருக்கு ஈசன் தெளிவை உண்டாக்கினார். இதனால் நந்தி, ஈசனுக்கு கட்டுப்பட்டவர் போல மூக்கணாங்கயிறுடன் காணப்படுகிறார். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் இந்த நந்தியிடம் இருந்து தான் பிரதோஷ நிகழ்வு தோன்றியதாக கருதப்படுகிறது.
இதனால் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு பிரதோஷம் பார்த்தால் ஆயிரம் பிரதோஷம் பார்த்ததற்கு சமமாகும். அதுபோல ஒரு சனி பிரதோஷத்தில் பங்கேற்றால், அது கோடி பிரதோஷத்தில் பங்கேற்று தரிசனம் செய்த பலனை தருமாம்.
குறுங்காலீஸ்வரர் தலத்தில் நந்தி பெருமானை வழிபட்டு கோடி பிரதோஷத்தில் பங்கேற்ற பலனை பெறத் தவறாதீர்கள். நந்தியை கடந்து சென்றால் 40 தூண்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபத்தை அடையலாம்.
இந்த மண்டப தூண்களில் ஏராளமான கண்கவர் சிற்பங்கள் இருப்பதை காணலாம். லவ, குச இருவரும் அஸ்வமேதயாக குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்துக் கொண்டிருக்கும் சிற்பம் கலை நயம் மிக்கது. இந்த மண்டபத்தின் நுழையும் பகுதியில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சன்னதியும், சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன.
அவர்களை தரிசித்து விட்டு ஈஸ்வரன் வீற்றிருக்கும் சன்னதிக்கு செல்லலாம். ஈஸ்வரன் சன்னதி இடது பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரும், வலது பக்கம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் சுமார் 4 அங்குல உயரமே கொண்ட லிங்க பாணத்தை கண் குளிர காண வேண்டும்.
லவனும், குசனும் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட இந்த லிங்கத்தை மனம் உருகி வழிபட்டால் எத்தகைய பித்ரு தோஷம் இருந்தாலும் விலகி விடும். இங்கு ஈசன் வடக்கு பார்த்து இருப்பதால் கருவறை கோஷ்டத்திலும் மாறுதலை பார்க்கலாம்.
விநாயகர், பிரம்மா, ஈஸ்வரனுக்கு பின்புறம் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை உள்ளனர். இந்த உள் பிரகாரத்தின் தொடக்கத்தில் நடராஜர், சூரியன், சந்திரன் உள்ளனர். கோமுக தீர்த்தம் விழும் இடத்துக்கு அருகில் சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது.
இவரைத் தொடர்ந்து விக்னேஸ்வரர், ஜுரகேசுவரர், அகஸ்தீசுவரர், கணேசமூர்த்தி, சாஸ்தா, கார்த்திகேயன், லிங்கம், திருமகள், சைவநால்வர், ஞானவாணி, நாகர்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். ஈஸ்வரனின் இந்த பிரகார வலம் முடிந்து அம்பாள் சன்னதிக்கு செல்லலாம்.
பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார். பக்தர்களின் துயர் தீர்க்க அம்பாள் புறப்படுவது போல அறம் வளர்த்த நாயகியின் தோற்றம் உள்ளது.
இவளை வழிபட திருமணம் கை கூடும். வியாதிகள் தீரும். மனக் குழப்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை. அம்மன் பிரகாரத்தை வலம் வந்து வழிபட்ட பிறகு அருகில் உள்ள நவக்கிரகங்களை வழிபடலாம். தாமரை பீடத்தில் நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் மனைவியுடன் சூரியன் உள்ளார்.
கீழே மற்ற கிரகங்கள் உள்ளன. வெளி சுற்றில் நந்தி சன்னதிக்கு வலது பக்கம் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளார். இவரை அருணகிரி நாதர் பாடியுள்ளார். இந்த சன்னதி அருகில் அண்ணாமலையார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
வெளி பிரகாரத்தை சுற்றி வந்தால் வில்வ விநாயகர், மடப்பள்ளி யாக சாலை, தலமரமான பலா ஆகியவற்றை காணலாம். லவன், குசன் இருவரும் உருவாக்கிய லவகுச தீர்த்தம் சிவால யத்துக்கும், பெருமாள் கோவிலுக்கும் பொதுவான தீர்த்தமாக உள்ளது.
கி.பி. 985 முதல் 1014 வரை ஆண்டு ஜெயம்கொண்ட சோழ மன்னர் இந்த கோவிலை பெரிய கற்கோவிலாக கட்டியதாக கூறப்படுகிறது. விஜய நகர மன்னர்களும் இங்கு திருப்பணி செய்துள்ளனர். இத்தலத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசிமகம், சிவராத்திரி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
ஈசன் இங்கு வடக்கு திசை பார்த்திருப்பதால் இத்தலம் மோட்சம் தரும் தலமாக கருதப்படுகிறது. இது தவிர சித்தர்கள், சப்தரிஷிகள், தேவர்கள், முனிவர்கள் இங்கு சூட்சம நிலையில் அருள் பாலிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தை வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்வது நல்லது. ஆலயத்தை 044-24796237 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
காசிக்கு இணையான தலம் :
இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இதை அறிந்து தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து குறுங்காலீஸ்வரரை வழிபட்டு பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் குறுங்காலீஸ்வரர் காசி இருக்கும் வட திசையை பார்த்தப்படி உள்ளார். அதனால் இத்தலம் காசிக்கு இணையான புனித தலமாக கருதப்படுகிறது.









































