html

Thursday, 24 December 2015

சந்திர மௌலீஸ்வரர் கோவில்,திருவக்கரை., திண்டிவனம்.
















































திருவக்கரை (Thiruvakkarai): 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரங்கள் (20 Million Years Old Fossilised Tree)


திருவக்கரை தொல்பழங்கால, வரலாற்றுக்கால ஊராகும். திருவக்கரை இயற்கைச் சிறப்பு மற்றும் பண்பாட்டுச்சிறப்பு பெற்ற ஊராகும்.

அமைவிடம்

இவ்வூர் திண்டிவனத்திலிருந்து மைலம் வழியாகச் செல்லும் பாண்டிச்சேரி சாலையில் சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது.

கல்மரங்கள்

இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் கல்லாகி படிவங்களாகக் (fossils) காணப்படுகின்றன.

இங்கு ஒரு கல்மரப் பூங்கா உள்ளது. இது போன்ற கல் மரங்கள் கிடைக்கும் இடங்கள் தமிழகத்தில் வெகு சிலவே உள்ளன.

தொல்பழங்காலச் சான்றுகள்

இங்கு பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், கல் மரங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. இவற்றில் சுரண்டிகள். செதில் கருவிகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இந்தக் கல் மரத்துண்டுகளும், குவார்ட்சால் ஆன கூழாங்கற்களும் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளன

பெருங்கற்காலச் சான்றுகள்

இங்கு பெருங்கற்காலத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்புப் பானைகள் காணப்படுகின்றன. மேலும் கருங்கற்களாலான கருவிகளும் கிடைக்கின்றன. இவைகளும் கல் மரங்களும் அருகிலேயே காணப்படுகின்றன.

கோவில்

இங்கு வரலாற்றுச்சிறப்பு மிக்க சிவன் கோவில் உள்ளது. இதன்பெயர் சந்திர மௌலீஸ்வரர் என்பதாகும். இக்கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த முதலாம் இராசராசன் மற்றும் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ அரசன் கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவி, இங்கு திருப்பணி செய்துள்ளார். இக்கோவிலில் தேவரடியார்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.





No comments:

Post a Comment