html

Thursday, 29 October 2015

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்




கோபுர தரிசனம்  கோடி புண்ணியம் என்பார்கள். பலரும் அதற்கான ஆன்மீக விளக்கங்களும்,அறிவியல் பூர்வமான விளக்கங்களும் கொடுத்துள்ளனர். நானும் பல கோவில்களுக்குச் சென்று  கோபுரங்களை  பார்த்திருக்கிறேன். தமிழர்களின் சிற்பக்கலைக்கு கோபுரங்கள் சாட்சியாக வானுயர  உயர்ந்து நிற்பது ஒருவித பரவசத்தியே  உண்டு பண்ணுகிறது.
பொதுவாக மனிதர்கள் நாம் பிறந்த மண்ணாகிய இந்த பூமியையே உற்று நோக்குவதை  பிரவித்தொழிலாகக் கொண்டுள்ளனர்.மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் தவிர  தங்கம் ,வெள்ளி, இரும்பு முதலிய உலோகப் பொருள்களும்,பெட்ரோலியப் பொருட்களும் ,நவரத்தினங்களும்,இரசாயனங்களும்,மூலிகைகளும், , மற்ற பொருட்களும் மண்ணில் இருந்தே மனிதன் எடுத்துக் கொண்டு தன் பிறவிப் பயன் மறந்து திரிந்து கொண்டு இருக்கிறான்.

தன அடையாளத்தைத் தொலைத்த மனிதனின் கவனத்தை  விண்நோக்கி திருப்புவதன் பொருட்டே  அக்கால ஞானிகள்  வானுயர்ந்த  கோபுரதரிசனம்  நல்ல விஷயம் என்று அது கோடி புண்ணியம் தரும் என்று சொல்லி வைத்தார்கள் என்று நினைக்கிறேன்
விண்வெளியில்  கொட்டிக்கிடக்கின்றன கோடானுகோடி அற்புதங்கள். கோடிக்கணாக்கான சூரியர்களும் சந்திரர்களையும் தவிர என்னவெல்லாமோ  மனிதனின் அறிவுக்கு எட்டாத  ரகசியங்களைக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். அந்த பிரபஞ்ச ஞானத்தை ஓரளவு  அறிய முயற்சிப்பதுதான்  இன்றைய நவீன விஞ்ஞானம்


பிரபஞ்ச ஞானத்தை  அறிய முற்பட்ட சித்தர்களும்  ஞானிகளும் தமது திறமைக்கு  ஏற்ப  அறிந்த தகவல்களை  முழுமையாகப் பதிவு செய்யவில்லை..அதனால்தான் அவர்கள் அறிந்த விஷயங்கள்  காலத்தால்  மறக்கப் பட்டுவிட்டன. நமக்கு கிடைத்த அவர்களது  சில ஆய்வுகளே  சோதிடக் கலையாகவும்,மருத்துவ நூல்களாகவும், யோக சாத்திரங்கலாகவும் நமக்கு கிடைத்துள்ளன. அவைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது..

மனிதன் பிரபஞ்ச அறிவைப் பெற முடியும்  என்பதை யோக கலை பயிற்சியின் மூலம் தேய்ந்து கொள்ள முடியும் என்பதை பிற்கால  சித்தர்கள் தமது அட்டமா சித்து வேலைகள் மூலமாக  மக்களுக்கு புலப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment